தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ஜூலை 15-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே..

தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வரும் 29-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் 6 மாதத்துக்குள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை-கோவை,விழுப்புரம்,-மதுரை, செங்கல் பட்டு -திருச்சி, நாகர் கோவில் -திருச்சி, அரக்கோனம்-கோவை, காட்பாடி -கோவை சிறப்பு ரயில்கள் ரத்த செய்யப்படுகின்றது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.