தஞ்சை பெரிய கோயிலிலும் 10 சிலைகள் திருட்டு : பொன் மாணிக்கவேல் ஆய்வில் கண்டுபிடிப்பு..

தஞ்சை பெரிய கோயிலில் பழமையான நடராஜர் சிலை உள்பட 10 சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக,

பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் சிலைகள் திருட்டு போயின.

சிலை திருட்டு தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில நாட்களுக்கு முன் சென்னையில் பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் படையினர் ஆய்வு நடத்தினர். .

இந்நிலையில் இன்று காலை தஞ்சை பெரிய கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது 10 சிலைகள் திருடப்பட்டுள்ளதும், போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.