தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து: முதல்வர் சந்திரசேகரராவ் அறிவிப்பு..

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி தெலுங்கானா அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்திவரும் நடவடிக்கையின் காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் 10 ம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலை உள்ளதால், தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.