கோவில்களின் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு..

தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்,

கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

திருப்புகளூர் வேலக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான பன்னிரண்டரை ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் வாடகை நிர்ணயக்குழுவுக்கு உத்தரவிடக்கோரி,

ஆதீனகர்த்தரான சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.