விரைவில்… காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர் பாபு..

தமிழகத்தில் காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருத்தணி கோயில் ராஜகோபுரம் – ரதவீதி வரை ரூ.90 லட்சத்தில் 56 படிக்கட்டுகள் அமைக்க அறநிலையத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் திருத்தணி கோயிலில் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.