பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து :சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம்
5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்ந்துள்ளது. அதுபோல் டீசல் விலை ரூ.100 தொட்டது. சமையல் காஸ் விலை ரூ.50 உயர்ந்து சிலிண்டர் ரூ.1000-ஐ தொட்டுள்ளது.
நாளுக்கு நாள் விலை உயர்வால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பெட்ரோல்,டீசல் காஸ் விலை உயர்வை எதிர்த்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிலிண்டருக்கு மாலை அணிவித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.