தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு,மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை சிம்சனுக்கு அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் மற்றும் சட்டமன்ற,உள்ளாட்சி நஉறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.