திருக்கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நலநிதி உயர்வு…

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் பணிக்காலத்தின்போது இறக்க நேரிட்டால் அவர்களுக்கான குடும்ப நல உதவியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா அறநிலையத்துறைக்கு பிறப்பித்த உத்தரவில்,

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் பணிக்காலத்தின்போது இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு குடும்ப நல நிதியாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும்,

இதற்காக மாத சந்தாவாக 15 ரூபாய் பணியாளர்களிடம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு லட்சமாக இருந்த குடும்ப நல நிதியை 3 லட்சமாக உயர்த்தியும், பணியாளர்களிடம் மாத சந்தாவாக 60 ரூபாய் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.