திருநள்ளார் சனிப் பெயர்ச்சி: காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..


காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை டிச.,18 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் கேசவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநள்ளாரில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை டிச.,18 விடுமுறை அளிக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாளை மறுநாள் காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.