திருவண்ணாமலை : சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை..

கரோனா தொற்று அதிகரிப்பால் திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலையை சுற்றி 14 கி.மீ சுற்றும் கிரிவலம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் சுற்றி வருவார்கள்.

கடந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை கரோனா தொற்றால் கிரிவலத்திற்கு தடைவிதி்ப்பட்டது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் -26-ந்தேதி சித்ரா பவுர்ணமி வருகிறது. சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.