திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா : நாளை கொடியேற்றம்..

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2650 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் அன்று வரும் நவம்பர்.19-ஆம் தேதி மகாதீபம் ஏற்றபடவுள்ளது.அன்று காலை பரணி தீபம் ஏற்றப்படும். கொடியேற்றம் நாளை நடைபெறவுள்ளது. சாமிகள் வீதியுலா கரோனா காரணத்தால் மாட வீதிகளில் நடைபெறாது. கோயில் 5-ஆம் பிரகாரத்தில் நடைபெறுகிறது.

இதன் முன்னோட்டமாக இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபதிருவிழா முன்னிட்டு இன்று (09-11-2021) மாட வீதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சுவாமி மற்றும் அம்மனுக்கு சாத்தப்படும் திருகுடைகள் கொண்டு செல்லப்பட்டது.