காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலுார் அருகே கரையை கடக்கும் :வானிலை மையம்..

வங்க கடலின் தென்கிழக்கே 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஸ்ரீஅரிகோட்டா- காரைக்கால் இடையே கடலுார் அருகே நாளை மாலை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் புதுவையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்திய வானிலை மையம் பல மாவடங்களுக்குக ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனிடையே வரும் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.