திருப்பதி திருமலை கோயிலில் அக்., 16ஆம் தேதி முதல் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதி..

திருப்பதி திருமலை கோயிலில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே நவராத்திரி பிரமோற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக இலவச தரிசனம் ரத்த செய்யப்பட்ட ரூ.300 கட்டண தரிசனம் மட்டமே நடைபெற்றது. புரட்டாசி பிரமோற்ச விழாவில் மாடவீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.