தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனம் : பக்தர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..


தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அதேபோல், சிறப்பு தரிசனத்தில் பக்தர்களை சாமி சிலைகளுக்கு அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்துக்கு தடைகோரிய வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.