தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 3,086 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,348 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 89,39,331 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 6,97,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,301 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 6,50,856 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா பாதிப்பால் இன்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 10,780 பேர் உயிரிழந்துள்ளனர்.