உ.பி. இடைத்தேர்தல் : கோரக்பூர்,பல்பூர் தொகுதிகளில் சமாஜ்வாதி முன்னிலை..


உத்திர பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள கோரக்பூர்,பல்பூர் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்லின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

கோரக்பூர் தொகுதியில் 10 வேட்பாளர்களும், பூல்பூர் தொகுதியில் 22 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோரக்பூர் தொகுயில் பா.ஜ.க-வை விட 1523 அதிக வாக்குகள் பெற்று சமாஜ்வாதி முன்னிலை வகிக்கிறது.

இதே போல் பூல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி முன்னணியில் உள்ளது. பூல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி 12,231 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.