நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு

நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று(ஆக.,16) மாலை காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நபைெறுகிறது. இதற்காக டில்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பா.ஜ. தலைமை அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வாஜ்பாய் உடல் கொண்டுவரப்பட உள்ளது.

விஜய்காட்டில் நினைவிடம்

வாஜ்பாயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி விஜய்காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க 1.5 ஏக்கர் நிலத்தை நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

Vajpayee’s last journey: Friday Evening 5 PM