நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி..

வரும் காலங்களில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி அத்தியாவசியம்!
அந்தக் காலத்தில் ஆன்மிகத் தலங்களுக்குப் பாத யாத்திரை, கிரிவலம், மலைமேல் நடப்பது எனப் பலரும் நடையாய் நடந்தது உண்டு. இன்றைக்கு மோட்டார்களும் எஞ்சின்களும் படுவேகத்தில் இயங்கவைக்கும் நிலையில், நடைபயிற்சி எனும் சிறந்த பழக்கத்தை ஏறக்குறைய மறந்தேவிட்டோம்!
உடலுக்குள் அவலங்கள்
உடலுக்குத் தேவையான அளவு அசைவு களைக் கொடுக்காததால், எவ்வளவு உடல் உபாதைகள் நமது உடலுக்குள் குடியிருக் கின்றன தெரியுமா? ரத்தக்குழாய்களில் தடிமனாகப் படிந்துள்ள கொழுப்புப் திட்டுக்கள், பானையைப் போன்ற வயிறு, சூரிய ஒளி பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் வைட்டமின் – டி குறைபாடு, நெகிழ்வாக இருக்க வேண்டிய மூட்டுப் பகுதிகள் அசைவின்றிக் கடினமாக மாறிவிட்ட அவலம், உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் திறன் குறைபாடு, உறக்கமின்மை எனும் மனரீதியான துன்பம், கஷ்டப்பட்டு உறங்கினாலும், மறுநாள் காலையில் ஏற்படும் கடுமையான உடற்சோர்வு, இயற்கையாக நிகழ வேண்டிய கழிவு நீக்க முறைகளில் பெரும் தடை, திக்கித் திணறும் செரிமானம் என எண்ணி லடங்காத உடல்ரீதியான திண்டாட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நோய்களின் தலைமுறை
இதெல்லாம் ஏதோ முதிய வயதில் ஏற்படும் தொந்தரவுகள் அல்ல. முறையான உடற் பயிற்சி இல்லாமல் நடுத்தர வயதினருக்கே ஏற்பட்டுவரும் நவீன கால உபாதைகள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி. துள்ளல் நிறைந்த குழந்தைப் பருவத்தில் நீரிழிவு நோயையோ, இளம் வயதில் அதீத உடற் பருமனையோ, இளம் வயதில் மாரடைப்பையோ, திருமணப் பருவத்தில் குழந்தையின்மை பிரச்சினையையோ நாற்பதுகளில் மூட்டுப் பிரச்சினைகளையோ சென்ற தலைமுறை எதிர்பார்த்திருக்குமா? உடல் உழைப்புக் குறைபாட்டால் மேற்சொன்ன விபரீதங்களை இந்தத் தலைமுறை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
நோய்களின் அறிக்கை
பெரும்பாலானோர் நடைப்பயிற்சி செய்வ தில்லை. காரணம் சொகுசான வாழ்க்கை, வேலைப் பளு. இதிலிருந்து எப்படி மீள்வது? மனோதிடத்துடன் உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்! விழித்துக்கொள்ளவில்லை எனில் நோய் வருகையை அறிவிக்கும்.
நலக் கண்ணாடி
நடைபயிற்சி என்பது உடல் எவ்வகையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நலக் கண்ணாடி! நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, இயல்பைவிட அதிக அளவில் மார்புப் படபடப்போ, மூச்சு வாங்கும் அறிகுறியோ, வேறு அறிகுறியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால், நம்மிடம் உடல் என்ன சொல்ல வருகிறது என்பதைக் கேட்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
நேர்மறைச் சிந்தனை
குளிர்ச்சியான ஒரு காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உண்டாகும் பரவசத்தை உணரத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் நடைபயிற்சியை அசையும் சொத்தாகப் பத்திரப்படுத்திக்
கொள்வீர்கள். நடக்கும்போது உடலுக்குக் கிடைக்கும் பலன்களுக்கு இணைப்பாக மனத்துக்கும் உற்சாகம் கிடைக்கும். ‘நடைபயிற்சியின் மூலம் தினமும் நமது உடலுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைத்துக்
கொண்டிருக்கும்…’ எனும் நேர்மறை எண்ணமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
காத்துக்கிடக்கும் பலன்கள்
உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க, மருந்துகளோடு நடைபயிற்சியும் அவசியம் என்கின்றன ஆய்வறிக்கைகள். ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க நடைபயிற்சி பெரிய அளவில் பலன்கொடுக்கும்.
இரவில் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுப்பதோடு, நாள் முழுவதும் உற்சாகத்தை அள்ளிக்கொடுக்க நடைபயிற்சி அவசியம். இளமையைச் செலவில்லாமல் நீட்டிக்க ஒரே வழி நடைபயிற்சி! நடைபயிற்சியின் மூலம் எலும்புகள், தசைகள் வலிமை அடைவதோடு சுவாசப்பாதையும் புத்துணர்வு பெறும். செரிமானக் கருவிகளில் தேங்கும் கழிவு முழுமையாக அகல பேருதவி புரியும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் அரை மணி நேர நடை மேற்சொன்ன அனைத்துப் பலன்களையும் வழங்கும்.
கைப்பேசி இன்றி நடப்போம்
வாய்ப்பிருந்தால் கைப்பேசி துணையில்லா மல் ஒரு நடை சென்று வாருங்கள். நீங்கள் தொலைத்த அற்புத உலகத்தை உங்கள் கற்பனாசக்தி கண்முன் நிறுத்தும். அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்றால், வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டுச் செல்லலாம் அல்லது செல்போன் ஒலிப்பானை அணைத்துவிட்டு, நடைபயிற்சி முடிக்கும் வரை, எக்காரணத்தைக் கொண்டும் செல்போனை எடுத்து வாட்ஸ்-அப்பையோ முகநூலையோ பார்க்க மாட்டேன் எனும் மனோதிடத்தை உருவாக்கிக்கொள்ளப் பழகுவது மனத்துக்குச் சுகமளிக்கும். இடையூறு அற்ற நடைபயிற்சி புது சிந்தனைகளைத் தூண்ட உதவும். கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புதிய இடம், அழகிய சூழல் வார்த்தைகளை வழங்குவதைப் போல, அனைவருக்கும் மகிழ்ச்சியான புதுப்புது சிந்தனைகளை மலரச் செய்து மனத்துக்குப் புத்துணர்வு அளிக்க நடைபயிற்சி துணை நிற்கும். அதே நேரம், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது தொடர்புக்காக அலை பேசியை வைத்துக்கொள்வதில் தவறில்லை.
Bioclock என்றால் என்ன?
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.
நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 – 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.
50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.
அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.
சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.
எனவே நண்பர்களே,

  1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.
  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.
  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் ). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.
  4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போங்கள்.
  5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).
  6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.
    எண்ணங்களே வாழ்க்கை.
    முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
    உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !!
    Keep your Legs Active and Strong !!!
    தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.
    நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை “வருமுன் தடுப்பு” (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.
    உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும்.
    நடந்து செல்லுங்கள்.
    டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
    எனவே, நடந்து செல்லுங்கள்.
    கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.
    நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது.
    கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும்.
    தினமும் நடைபயிற்சி.
    சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன.
    நடந்து செல்லுங்கள்
    மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.
    10,000 அடிகள் / நாள்
    வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின்
    இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
    மனித உடலைச் சுமக்கிறது.
    ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
    ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை.
    *கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.
    இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.
    கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள்.
    ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
    தயவுசெய்து நடந்து செல்லுங்கள்
    கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
    நடங்கள்.
    வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள்.
    பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
    தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்
    ▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை.
    10,000 அடிகள் நடக்க
    எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
    365 நாட்கள் நடைபயிற்சி
    உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
    *இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்
    வாழ்க வளத்துடன்.

நண்பர்
கண்ணன் சொக்கலிங்கம்

முகநுால் பதிவிலிருந்து