பெண்களுக்கான சட்டங்களை பெண்களே நிறைவேற்றும் நிலை வேண்டும் : லயோலா கல்லூரி கலந்தாய்வில் தமிழச்சி பேச்சு..

பெண்களுக்கான சட்டங்களை பெண்களே நிறைவேற்றும நிலை வர வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியுள்ளார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது எப்படி என்ற தலைப்பில்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து பொது கலந்துரையாடல் கருத்தரங்கம் நடத்தினர்.

இதில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்,ஆரம்பத்தில் பெண்களுக்கான மாநாட்டை நடத்தியவர் பெரியார் என்றும் பெண்களுக்கான சொத்துரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர் என்றும் கூறிய தமிழச்சி, திமுக பெண்களின் அரசியல் உரிமைக்காக பாடுபட்டுள்ளது என்றார்.