எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்.
அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.