காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு..


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் படுகாயம் அடைந்த சின்னய்யா சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.தாக்குதலில் ஈடுபட்ட ராஜா, பாண்டியராஜன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்த நிலையில், பழனிக்குமார், பாலசுப்ரமணியனுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.