வட மாநிலங்களில் தொடரும் பணத்தட்டுப்பாடு: பொதுமக்கள் தவிப்பு..


கடந்த ஒருவாரகாலமாக வட இந்தியாவில் உள்ள ஏடிம் வாசலில் மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடியே உள்ளன.ஏடிஎம்களில் வெறும் 100 ரூ தாள்களே வருகின்றன.

புதிய ரூ 500,2000 தாள்கள் இல்லையென்கின்றனர். பொதுமக்கள் பணம் கையில் இல்லாமல் பொருட்களை வாங்க தவித்து வருகின்றனர். நிதியமைச்சர் ஓரிரு நாட்களில் சரியாகும் என்றாலும் மக்கள் மணிக்கணக்கில் ஏடிஎம் வாசலில் காத்திருக்கின்றனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை போல் தற்போதும் மக்களிடம் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.