இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

இரட்டை இலை சின்னத்தை பெற தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில்

அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் மீது பாட்டியாலா நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்டவழக்கில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த பாட்டியாலா நீதிமன்றம் வருகின்ற 17ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று தொிவித்துள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாஉயிாிழந்ததைத் தொடா்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.

பல்வேறு குழப்பங்களுக்கு பின்னா் டிடிவி தினகரன் ஒரு அணியாகவும், பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் ஒரு அணியாகவும் செயல்படத் தொடங்கினா்.

அப்போது இரு தரப்பிலும் அ.தி.மு.க. கட்சிக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் உரிமை கோரப்பட்டது.

இதனைத் தொடா்ந்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில் கடந்த நவம்பா் 17ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதற்கான முகாந்திரம் இருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தொிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் டிடிவி தினகரன் டிசம்பா் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி டிடிவி தினகரன் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

அப்போது சட்டப்பிரிவு 120B (குற்றச்சதி), 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் மீது வருகின்ற 17ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.