ஆப்கானில் குடிநீரில் நஞ்சு கலப்பு :100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..


ஆப்கானிஸ்தானில் கிழக்கு பர்வான் மாவட்டத்தில் கால்வாயிலிருந்து கொடுக்கப்பட்ட குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டதால் நீரை அருந்திய 100 மாணவிகளுக்கு திடீர் உடல் நலைக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 60 மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆப்கான் தீவிரவாதிகளின் சதி எனவும் தகவல்கள் கூறுகின்றன.