ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் திட்டமிட்டப்படி ஆக.31க்குள் வெளியேறும் : அதிபர் ஜோ பைடன்..

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் தலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து வெளிநாட்டினரும், அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தர்களும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான்கள், அமெரிக்கப் படைகள் திட்டமிட்டப்படி வெளியேற வேண்டும் என்றனர். மேலும், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தர்கள் வெளியேற தடைவிதிக்கப்படும் என்றும் கூறினர். இந்நிலையில், ஆப்கான் விவகாரம் குறித்து நடைபெற்ற ஜி7 மாநாடு நடைபெற்றது.