ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கை ஜனவரி 11ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.