ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : லண்டனில் அவசரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து அமெரிக்காவின் நேவார்க் நகரை நோக்கி சென்ற ஏர்இந்தியா 191 விமானம் லண்டன் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.