ஆண்டிபட்டி அருகே துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.

மாமன் மைத்துனன் உறவுகளை துடைப்பத்தால் அடிக்கும்போது உறவு மேம்படும், தோஷங்கள் நீங்கும்’ என மறவப்பட்டி கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.