பாஜகவின் முடிவு தொடங்கி விட்டது: மம்தா பாணர்ஜி

பாஜக வின் முடிவு தொடங்கி விட்டதையே 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்தத் தேர்தல் செமி ஃபைனல் தான். செமி ஃபைனலிலேயே, 2019 தேர்தலான ஃபைனலில் என்ன முடிவு வரும் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. பாஜகவின் முடிவு தொடங்கி விட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். பாஜகவின் இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற மமதை… அதனால் ஜனநாயகத்தின் அமைப்புகள் அனைத்தையும் தவறாக பயன்படுத்தியது… என்று பலவற்றைக் கூறலாம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு, மூன்று மாதங்களில் நடைபெறும். அதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது.

இவ்வாறு மம்தா பாணர்ஜி தெரிவித்தார்.