பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடரும் மாணவர்கள் போராட்டம்..


பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.