மகளிர் காங்., கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராரெட்டி நியமனம்..

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

தேசிய அளவில் புகழ்பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், நிகழ்ச்சி தொகுப்பாளார் என்ற பன்முகம் கொண்டவர் அப்சரா ரெட்டி.

முதன் முதலாக கடந்த 2016-ல் பாஜக-வில் இணைந்த அப்சரா, அதற்கு பிறகு அதே ஆண்டு அதிமுகவில் இணைந்து, செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.

தற்போது காங்கிரஸ் அவருக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி ஒன்றில் திருநங்கை நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.