சமையல் எரிவாயு விலை உயர்வு : இல்லத்தரசிகள் கவலை..

சமையல் எரிவாயுவிலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 kg ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தியும், உணவகங்கள் மற்றும் பொது பயன்பாட்டு சிலிண்டர் 19 kg விலை ரூ. 350.50 உயர்த்தியுள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆகவும், பொது பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.2,119.50 ஆக உயர்ந்துள்ளது.

சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.