கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,577 ஆக உயர்வு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577 ஆக உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்:

இந்தியாவில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை: 3,577

மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை: 83

மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 274

கடந்த 24 மணி நேரத்தில் 505 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதித்தோரின் எண்ணிக்கை 3,500-ஐத் தாண்டி 3,577 ஆக உயர்ந்துள்ளது.