நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 4 வாரத்தில் நேரில் ஆஜராக ஐசரி கணேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாக ஐசரி கணேஷ் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.