தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி : பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ..

தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி அமைக்கப்படுகிறது – தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 திமுக சட்டத்திட்ட விதிப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களை கட்சி உறுப்பினர்களாக இணைக்க புதிய அணி உருவாக்கப்படுகிறது.

இந்த அணியின் செயலாளராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இணைச் செயலாளர்களாக தரமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார். புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.