குரூப்-1 முதல்நிலை தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு..

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுகடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபம் இருப்பின் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள், ஜன.14-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.