தி.மு.க பொதுக்குழு நாளை கூடுகிறது ..


திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்படவுள்ளதால், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாளை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக பொதுக்குழு கூடுகிறது. கட்சியின் வரவு செலவு தொடர்பான தணிக்கை அறிக்கை கூட்டத்தில் தாக்கல் செய்யபடவுள்ளது.

தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதனால் நாளைய பொதுக்குழுவில் தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். நாளைய பொதுக்குழுவில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது கலைஞர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.