திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து :உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழக சட்டப்பேரை சபாநாயகர் அளித்த உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2017-ஆம் ஆண்டு தடையின்றி குட்கா போதைப்பொருள் தமிழகத்தில் விற்கப்படுவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர சட்டப்பேரவைக்குள் குட்காவை கொண்டு வந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் சபாநாயகர் தனபால் அளித்தார்.

இதனை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.