தமிழகத்தில் இன்று 76 பேருக்கு காரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 76 பேருக்கு காரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் 1,596 பேருக்கு பாதிப்பு உள்ளது.

இன்று நோய் தொற்றால் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.