“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்


ஹாவர்டு பாஸ்ட் என்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்த கதையில் பூங்கா ஒன்றில் ஒரு நாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவு வளர்ந்துவிடும். கண்ணில் படும் மனிதர்கள் அத்தனை பேரும் உடனே எறும்புகளை தடியால் அடித்து கொல்ல துவங்குவார்கள்.

ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு மருத்துவர் ஒவ்வொரு மனிதனாக தேடி சென்று விசாரணை செய்வார். எறும்பு மிகப் பெரியதாக இருக்கிறது அதனால் தான் என்று பலரும் சொல்வார்கள். யாரையாவது அது கடித்ததா? இல்லை ஏதாவது கெடுதல் செய்தததா என்று மருத்துவர் கேட்டவுடன், அதெல்லாமில்லை ஆனால் எறும்பு எறும்பாக தானே இருக்க வேண்டும் என்று ஆட்சேபணை செய்வார்கள்.

உடனே மருத்துவர் சொல்வார் மனிதர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஆனால் காலம் காலமாக எறும்புகள் எறும்புகளாகவும் யானைகள் யானைகளாகவுமே இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயமிருக்கிறது. வளர்ச்சியும் மாற்றமும் மனிதர்களுக்கு மட்டுமேயானதில்லை என்பார்.

கற்பனையான கதை என்ற போதும் கதையின் அடிநாதமாக மனிதர்கள் எப்போதுமே கற்பனையான பயத்திலும், உலகம் தனக்கு மட்டுமேயானது என்று அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

நன்றி

முகநுால் பதிவு