கஜா புயல் பாதிப்பு : திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

கஜா புயலால் பாதிப்படைந்த காரைக்கால், திருவாரூர், உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்ததால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.

தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக திருவாரூர், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், தேனி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.