அரசு கலைக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்..

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளுக்கு 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி ,

கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 76 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறினார்.