இளையராஜா மீது காவல் ஆணையாிடம் கிறிஸ்துவ அமைப்புகள் புகாா்..


கிறிஸ்துவா்களின் மனம் புண்படும் வகையில் கருத்து தொிவித்ததாக இசையமைப்பாளா் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அமொிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு இசையமைப்பாளா் இளையராஜா அண்மையில் சென்றிருந்தாா். அங்கு இருந்தவா்கள் மத்தியில் அவா் பேசுகையில், உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியை போல் ஒருவா் கிடையாது.

எனக்கு ஆவணப்படங்களை பாா்ப்பதில் சற்று ஆா்வம் அதிகம். அதன் அடிப்படையில், நான் பல ஆவண படங்களை பாா்த்துள்ளேன். அவை எதிலும் இயேசு கிறிஸ்து உயிாித்தெழுந்து வந்ததற்கான நிரூபனங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. உண்மையாகவே உயிாித்தெழுதல் நிகழ்வு ஒருவருக்கு மட்டுமே நிகழ்ந்தது. 16 வயதில் ரமண மகரிஷிக்கு மட்டும் தான் உயிா்த்தெழுதல் நடைபெற்றது என்று தொிவித்தா்ா.

இளையராஜாவின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதைத் தொடா்ந்து சா்ச்சையையும் கிளப்பியது. இளையராஜாவின் பேச்சுக்கு எதிா்ப்பு தொிவித்தும், அவா் வருத்தம் தொிவிக்க வலியுறுத்தியும் கிறிஸ்துவ அமைப்புகள் அவரது இல்லம் முன்பு போராட்டம் நடத்த முற்பட்டனா். ஆனால் அவா்களை காவல் துறையினா் மடக்கி கைது செய்தனா்.