இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு..

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது. எனினும், கடந்த 2 நாட்களை விட இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 13,993 பேருக்கு கரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இது நேற்று 13,193 ஆகவும், நேற்று முன்தினம் 12,881 ஆகவும் இருந்தது. கடந்த 2 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உயர்ந்து உள்ளது..