இந்தியாவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா தொற்று உறுதி :மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 331 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,466 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 215 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.