ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம்..


2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது என கூறி பீட்டா அமைப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2017 ஜனவரியில் மெரினாவில் பொங்கியெழுந்த தமிழ் இளைஞர்களின் போராட்டத்தால் ஜல்லி கட்டுக்கான தடை நீங்கியது. ஜல்லிகட்டுப் போட்டிகள் விமர்சையாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மீண்டும் தடை கோரி மனு தாக்கல் செய்தது. மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.