கண்ணூர் சர்வதேச விமான நிலையம் திறப்பு..

கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர்.

கண்ணூர் விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் நாட்டிலேயே 4 சர்வதேச விமானநிலையம் உடைய ஒரே மாநிலமாக கேரளா திகழ்கிறது.

ஏற்கனவே கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது