காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..


காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மாங்கனி வீசும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். கைலாசநாதர் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலா வருகிறார். அவர் வரும் வீதிகளில் மக்கள் மாடங்களிலிருந்து மாங்கனிகளை வீசி வருகின்றனர். காரைக்கால் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது.