காரைக்குடியில் சாலையை சீர்படுத்த கோரி முற்றுகை போராட்டம்..

காரைக்குடியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகள் சில சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் இன்று செஞ்சையிலிருந்து தேவகோட்டை ரஸ்தா செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்களும் அரசியல் அமைப்புகளும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் காரைக்குடி டிஎஸ்பி வினோஜி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3வாரங்களுக்குள் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


செய்தி &படங்கள்
சிங்தேவ்