இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி டிவிட்..

கனிமொழி எம்.பி

துாத்துக்குடி மக்களவை உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாருமான கனிமொழி எம்.பி தனது டிவிட் பக்கத்தில்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாகும்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.